ஒரு நாள் கனவு

ஒரு நாள் கனவு நினைவாகுமே
அது நாள் வரைக்கும் உயிர் பெறுமே
கனவுகள் எல்லாம் மெய்ப்படுமே
கடவுளின் அருளும் துணைவருமே
முயற்சி என்பது நம் வசமே

வாழ்க்கை முறை தான் உயர உயர
ஒழுக்கம் என்பது வாழ்க்கையின் நெறியாக
உயர்ந்தவரெல்லாம் கடந்து வந்த பாதை
அதை நீ அறிந்தால் உதித்திடும் நம்பிக்கை
நல்லதை நீ தான் செய்திட வேண்டும்
நல்லதை நீ தான் நினைத்திடவேண்டும்
நினைத்ததுயெல்லாம் நடந்திடும் உன் வழியில்

வாழ்க்கையில் நடப்பது எல்லாம் அனுபவமே
அதை ஏற்று கொண்டால் உனக்கு வெற்றி நிச்சயமே
நேரம் என்பது பெருஞ்செல்வம்
அதில் ஆக்கம் செய்வது உன் சாமர்த்தியம்
இலக்கு என்பது தெளிவானால் பயணம் என்பது இனிதாகும்
செயலில் நீ தான் இறங்கிடும் முன்னே
அதை ஆய்வுச்செய்து அறிந்திடும்கணமே
மனதில் உறுதி பிறந்திடும் உனக்கு
அது அழைத்துச்செல்லும் வெற்றியின் சன்னதிக்கு

கணபதி வாழ்த்து

காலமெல்லாம் காத்திடுவாய் கணபதியே
உன்னை கண்ட மனம் இனித்தொழுது நலம்பெருமே
நாள்முழுதும் உன்தன் முகம் துணை வருமே
இனி அமைதியென்றும் என் மனதில் குடிபுகுமே
வாழ்நாளும் உன் நாமம் ஒலித்திடுவேன்
இனி வாழும்வரை உனை நானே வழிபடுவேன்

முதற்கடவுள் நீ என்று பறைசாற்றும் இவ்வுலகம்
உனை மறவாமல் எப்பணியும் தொடங்காது இவ்வுள்ளம்
துன்பமென்றால் துணை வருவாய் துவண்ட மனம் மகிழ்வுபெறும்
உன் தும்பிக்கை என் நம்பிக்கை அது வழி காட்டும் என்றென்றும்
விக்னவனே நீ வருவாய் வினைகள் எல்லாம் தீர்ந்திவிடும்
என் பாவமெல்லாம் எனை நீங்கும் ஐயா
உன் பார்வை பட்டால் அது போதும் ஐயா
மனம் திறந்து என் குறை சொன்னேன்
உன் தரிசனம் வேண்டி காத்திருந்தேன்
இனி வருத்தமில்லை ஒரு துன்பமில்லை நீயே கதியென்று நானிறுந்தேன்

பூவெல்லாம் பூத்திருக்கும் உன் பூஜைக்கு தானே
மனம் இசைப்பாடும் உன் அசைவாலே என் நாயகனே
ஐங்கரனை நான் வணங்கி துதிப்பாடும் மறுகணமே
அவன் அருளால் நான் மகிழ்ந்து நல்வாழ்வை பெற்றிடுவேன்
துன்பம் என்றால் உனை நான் தொழுவேன்
இன்பம் என்றால் நன்றி உரைப்பேன்
வருவாய் அருள்வாய் இறைவா