பாவை பார்வையில் புதிதாய் மெல்ல சிரிக்கையில் இனிதாய் சுகம் தான் எந்தன் நெஞ்சில் நிலைக்கும் என்றும் விழியில்
காற்றில் அசையும் பயிர் போல் வளைந்து நெளியும் இடையே பாதை முழுதும் நீயே என் பார்வை ஈர்த்தாய் மதியே கோவில் சிலை போல் அழகே பிரம்மன் செதுக்கினான் உனையே தரிசனம் நீயும் தந்தாய் உன் பக்தனாகி போனேன்.
தினமும் உன்னை காண ஏங்கித்தவிக்குது மனமே உன் வழித்தடம் எல்லாம் தொடர்ந்தேன் என் வழியை நானும் மறந்தேன்.
பார்வையில் தூண்டிலை வைத்தாய் சிக்கிக்கொண்டேன் நானாய் துள்ளி தவிக்கும் மீன்போல் சிக்கி தவிக்குது மனமே கூட்டத்தில் நீயும் நின்றாய் ஏனடி என்னை ஈர்த்தாய் கவிதை பாட செய்தாய் என்னை கவிஞன் ஆக வைத்தாய்
இரவில் நீயும் வந்தாய் என் கனவை நிரப்பி சென்றாய் காதல் கொண்டு பறந்தேன் உன் கற்பனையில் நானும் மிதந்தேன்.
கிருஷ்ணன் சாப்ட்வேர் என்ஜினீயர் வேலை செய்றான். அவனுக்கு இசைநா ரொம்ப பிடிக்கும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் யூடூபில்ல இளையராஜா, ரஹ்மான் மியூசிக் விரும்பி மணிக்கணக்கா கேட்பான்.
ஜானகி, கிருஷ்ணன் மனைவி, பேங்க் வேலை செய்றா. இவங்களுக்கு கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகுது.
திங்கள் முதல் சனி வரை வேலையில பிஸியா இருப்பாங்க. ஞாயிறு வந்தா முழு ரெஸ்ட் சமையல் கிடையாது ஓட்டல் அல்லது ஸ்விக்கில சாப்பிடுவாங்க. இன்னிக்கி முக்காவாசி வீட்டுல இப்படித்தான்.
ஞாயிற்றுக்கிழமை வந்தது கிருஷ்ணனுக்கு பிறந்த நாள் வேற, இரண்டு பேரும் காலையிலே எழுந்து கோயில் போயிட்டு அங்கிருந்து மால் போனாங்க. ஜானகி புதுசா மொபைல் வாங்கி கிபிட்டா குடுத்தா.
அப்போ கடையில வேலை செய்ற பொண்ணு பிரீ சிம் ஆஃர் இருக்குன்னா, ஜானகி வேண்டாம்னு சொன்னா . கிருஷ்ணன் வாங்கிக்கிளாம் பழைய நெம்பர்ல அடிக்கடி சேல்ஸ் கால் வருது ரொம்ப தொல்லையா இருக்கு. பர்சனல்க்கு இந்த நெம்பர் வச்சிக்குறேன் சொல்லி சம்மதிக்க வச்சான். அப்புறம் அங்கிருந்து படம் பார்த்திட்டு, சாப்பிட்டு வீட்டுக்கு போனாங்க.
திங்கட்கிழமை ஆரம்பிச்சது வேலைக்கான ஓட்டமும் ஆரம்பிச்சது அடுத்த ஞாயிற்றுக்கிழமை காண ஏக்கமும் கூடவே ஆரம்பிச்சது.
ஞாயிற்றுக்கிழமையும் பிறந்தது, பத்து மணிக்குதான் கிருஷ்ணனும் ஜானகியும் எழுந்தாங்க. காலையில நூடுல்ஸ், அப்பறம் வீட்டுவேலை, மதியம் ஸ்விக்கி. இருண்டு பேரும் சோபால ஒருத்தர் மேல ஒருத்தர் சாஞ்சிக்கிட்டு ottயில்ல படம் பார்க்க ஆரம்பிச்சாங்க.
அப்போ கிருஷ்ணன் போன் அடிச்சது, கணபதி, காலேஜ் நண்பன், திருச்சியில் இருந்து பர்சனல் வேலையா சென்னை வந்திருக்கிறான்.
“கிருஷ்ணா, கே கே நகர் சிவன் பார்க்கிட்ட ஒருத்தர பார்க்க வந்தேன், நீ பார்கிக்கு வந்தா உன்னையும் பார்த்திட்டு ஊருக்கு கிளம்புவேன்”
கிருஷ்ணன் எழுந்தான், ஜானகி உடனே “ஏங்க நைட் டின்னர் போனும் ஞாபகம் வச்சிக்கிங்க ஊர் சுத்தாதிங்க.”. மண்டைய ஆட்டிக்கொண்ட கிளம்பினான்.
பார்க்கில கணபதியை பார்த்து பேசிட்டு, கலைஞர் நூற்றாண்டு விழாக்காக இசை கச்சேரி நடந்தது, அங்கபோய் உட்கார்ந்தான் . நேரம் போனது தெரியல. கச்சேரி முடிந்து போன் பார்த்தா அஞ்சு மிஸ்ட் கால் ஜானகிட்டயிருந்து. வீட்டுக்கு கிளம்பினான், ஜானகி கடுப்புல உட்கார்ந்துகிட்டு இருந்தாள்.
கிருஷ்ணன் உடனே “சாரி ஜானகி , நாலு பேரு ஒருத்தர மாத்தி ஒருத்தர் என்னமா perform பண்ணாங்க semmaya இருந்தது”
தோயிரு குளிச்சிட்டு வந்திற்றேன். பாத்ரூம் குள்ள போனான். கிருஷ்ணன் மொபைல்ல மெசேஜ் வந்துக்கிட்டேயிருந்தது. ஜானகி எடுத்து பார்த்தா
“Dear customer, four foreign girls, individual attention, full body massage 100% satisfaction guaranteed”.
கிருஷ்ணன் குளிச்சிட்டு வெளியே வந்தான்.
சார் இதுக்குத்தான் பிரைவேட் சிம் வாங்கனிங்களோ என்று கத்த ஆரம்பித்தாள்.
என் மனைவி ஜெயா ஒரு மெகா டிவி பைத்தியம். முன்னாடியெல்லாம் சன்டிவியில வாழ்க்கை, சித்தி, சீரியல் பார்த்துக்கிட்டிருந்தா. இந்த சீரியல் எல்லாத்திலும் அம்மாவோ அக்காவோ சித்தியோ ரொம்ப கஷ்டம்படுவாங்க அப்பறம் எப்படி சாதிக்கிறாங்க தான் கதை. இது வருஷ கணக்குல போச்சுங்க
அப்புறமா விஐய்டிவியில பிக்பாஸ் பார்க்க ஆரம்பிச்சா. பத்து பேர் ஓரு விட்டில அவங்கள சுத்தி கேமிரா காலை ஏழுந்ததிலிருந்து இரவு படுக்கிறவரைக்கும் என்ன கூத்து நடக்குதோ அத பார்த்துக்கிட்டிருந்தா. இது நாறு நாள் போச்சுங்க. அப்பறம் பார்த்தா புதுசு புதுசா ஆள கூட்டி வந்து நிகழ்ச்சி போய்கிட்டே இருந்துங்க
இப்ப யூடியூப்ல ராம் மற்றும் சீதா சேனல் பார்த்துக்கிட்டிருக்கா. ராம் சினிமா விமர்சனம் பண்ணிக்கிட்ருந்தான், சீதா சமையல் பேஷன் விடியோ பண்ணிக்கிட்ருந்தா. இரண்டு பேரும் பாப்புலரா இருந்தாங்க. ஒரு நாள் ராம் சீதாவுக்கு புரப்போஸ் பண்ணி விடியோ போட்டான் அது செம வைரல் ஆச்சு. சீதாவும் விடியோ போட்டு ஓகே சொல்லிட்டா.
அப்புறம் என்ன பெரியவங்க பேசி நிச்சயம் பண்ணாங்க, இரண்டு பேரும் ஊர் சுத்தி நாங்க, காதல் பண்ணாங்க, புடவ நகை வாங்கி நாங்க, கல்யாணம் பண்ணாங்க, ஹனிமூன் போணாங்க, புதுவீடு வாங்கி நாங்க, குடித்தனம் போணாங்க, கருத்தரிப்பு ரிசல்டு காட்டினாங்க, குழந்த பொறந்து பாப்பாவ காட்டினாங்க. பாப்பாவிற்கு ஆலியானு பேரு வச்சு அந்த பாப்பாவுக்கும் புதுசா சேனல் ஆரம்பிசிட்டாங்க. இப்படி தினமும் அவங்க வாழ்க்கையில நடக்கிறத விடியோவா போடுறாங்க.
இது மெகா சீரியல் விட போய்ட்டே இருக்குங்க. இவங்க வாழ்க்கையை பாரக்கிறத ஜெயாயோட வாழ்க்கை ஆயிடுச்சு (என்னையும் சேர்த்து), அடுத்த வாழ்க்கை வரவரைக்கும்.
delta delta வந்துடுச்சுன்னு vaccination போட சொல்றாங்க omi omi cronu வந்துடுச்சுன்னு booster போட சொல்றாங்க delta என்ன omi என்ன விட்டுத்தள்ளு சொல்றேனுங்க மாஸ்க் போட்டு கை கழுவி distance தான் உன்ன சுத்தி ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா
வீட்டுல வீட்டுல இருந்தாக்கா மனைவி வேலை வேலை சொல்றாங்க ஆபீஸ் ஆபீஸ் போனாக்கா பாஸ் வேலை வேலை சொல்றாங்க மனைவி சொல்றா பாஸ் சொல்றா விட்டுத்தள்ளு சொல்றேனுங்க நண்பனுக்கு phone போடு ஜாலியா தான் பேசித்தள்ளு ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா
முருகா நின் பெயர் அழகு முருகா நின் முகம் அழகு முருகா நின் வேல் அழகு முருகா நின் தமிழ் அழகு
அழகுக்கே பொருளானாய், தமிழுக்கே முதலானாய் அல்லல்படும் அடியார்க்கு அருள் செய்தாயே
பிரணவத்தின் பொருள் தன்னை அடியேனுக்கு அருளுரைப்பாய் சக்தி தந்த வேல் கொண்டு என் அசுரனை வதம் செய்வாயே.
பாடல் 2
முருகவேல் உனை தொழுகவே இப்பிறவியில் எனை படைத்தாய் கருணைவேல் எனை காக்கவே நீயும் தாய் தந்தையாய் உருவெடுத்தாய் ஞானவேல் என் குருவான வேல் எனக்கு ஆதியும் அந்தமும் போதிப்பாய் அழகுவேல் என் மனம் குளிரவே நீயும் தெய்வ தரிசனம் தருவாய்.
பாடல் 3
முருகா உனை அணுகி அணுகி மனம் உருகி உருகி கண்ணீர் மல்கி மல்கி கரம் ஒன்றி ஒன்றி சிரம் பணிந்து வணங்கி உன் திருப்புகழ் பாடி திருவடி தொழுவேன் உன் திருவருளை தருவாய்.
பாடல் 4
என்னுள் இருந்து என்னை இயக்கும் பரம்பொருளே என்னுள் உன்னை உணர எனக்கு வரம் தருகவே என்னுள் இருந்து என்னை இயக்கும் பரம்பொருளே என்னுள் உன்னை காண எனக்கு வரம் தருகவே
சிறியேன் உனது அடியேன் ஆகவே உன் மீது அன்பும் தந்து அருளும் தருகவே கொண்டேன் பிறவியை தொழுதேன் திருவடியை உன்னை அருட்சோதியாய் காணவே
மண்ணில் வரும் இன்பம் துறக்கவே உன்னை நினைத்து தவம் புரியவே கொண்டேன் பிறவியை தொழுதேன் திருவடியை உன்னில் ஒன்றாய் கலந்திடவே.
பாடல் 5
எத்தனை பிறவி எடுத்திருப்பேன் ஒரு முறையாவது உன் திருவடி பற்றியிருந்தால் பிறப்பு என்னும் சங்கிலி அறுத்திருப்பாய்
எத்தனை பாவங்கள் செய்திருப்பேன் ஒரு முறையாவது உன் திருநாமம் சொல்லியிருந்தால் பாவ வினைகளை குறைத்திருப்பாய்
எத்தனை இன்பம் தேடி அலைந்திருப்பேன் ஒரு முறையாவது உன் திருவருள் நாடியிருந்தால் பேரின்பம் காணும் வழியை தந்திருப்பாய்
எத்தனை நூல்கள் நானும் கற்றிருப்பேன் ஒரு முறையாவது உன் திருபுகழை கற்றிருந்தால் பெரும் ஞானத்தை எனக்கு தந்திருப்பாய்
முருகா ஒரு முறை செய்ய அருள்புரிவாய் பலமுறை தொடர்ந்திடும், நீயும் ஆட்கொள்வாய்.
பாடல் 6
எண்ணம் முழுவதும் உன் திருவருளையே நினைத்தது கண்கள் இரண்டும் உன் திருவுருவத்தையே பதித்தது செவிகள் இரண்டும் உன் திருப்புகழையே கேட்டது எந்தன் நாவும் உன் திருநாமம்மே சொன்னது கைகள் இரண்டும் உன் திருவடியையே பற்றியது கால்கள் இரண்டும் உன் திருக்கோவிலையே நாடியது நெஞ்சம் உருகி உன் அன்பையே வேண்டியது.
பாடல் 7
கேட்டேன் கேட்டேன் முருகா உனை கேட்டேன் உன் மீது மிகையான அன்பை கேட்டேன் அன்பால் வரும் அருளையும் கேட்டேன்
கேட்டேன் கேட்டேன் முருகா உனை கேட்டேன் என் மனம் தூய்மையடைய கேட்டேன் மனத்தூய்மையால் வரும் உன் வரவையும் கேட்டேன்
கேட்டேன் கேட்டேன் முருகா உனை கேட்டேன் எனக்கு ஞானத்தை உபதேசமாக கேட்டேன் ஞானத்தால் வரும் பேரின்பமும் கேட்டேன்
கேட்டேன் கேட்டேன் முருகா உனை கேட்டேன் இந்த பூமியில் மீண்டும் பிறவாமை கேட்டேன் பிறவாமையால் வரும் முக்தியையும் கேட்டேன்.
பாடல் 8
முருகா உன் புகழை நானும் பாட வேண்டும் முருகா உன் பெருமையை நானும் எழுத வேண்டும் முருகா உன் மேன்மையை நானும் பறை சாற்ற வேண்டும் இவை அனைத்தும் உன்னை உணர்ந்தால் தானே முடியும் அதை எனக்கும் நீ வரமாய் தருதல் வேண்டும்.
பாடல் 9
சரணாகதி சரணாகதி கந்தனிடம் அடைவோம் சரணாகதி பதி யார் பதி இந்த உயிர்களுக்கெல்லாம் அவரே பதி
விதியால் பிறவி கொண்டோம் புவியில் அறுப்பார் இனி அவர் பாதம் பணி இந்த சீவன் கதி இனி அவரே சரணாகதி
ஆசையால் மனமே படுமே அவதி பொருளை தேடியே தினம் கழியும் என் கதி உன்னை நான் அடைய எண்ணத்தை என்னில் விதைக்க ஆட்கொள் என்னையே முன் தேகமும் மண்ணில் எரிக்க.
பாடல் 10
உச்சிமலை முருகா என்னையும் உச்சியில் வாழ வைத்திட வா கருணை வடிவமே முருகா என்னையும் கருணை காட்ட வைத்திட வா ஞானத்தின் உருவமே முருகா என்னையும் ஞானப்பண்டிதனாக வைத்திட வா எண் குணத்தலைவனே முருகா என்னையும் குணத்தில் சிறந்தவனாக வைத்திட வா வள்ளல் பெருமானே முருகா என்னையும் வள்ளலாக இருந்திட வைத்திட வா உன்னை தொழும் அடியேன் முருகா என்னையும் உன்னைபோல் திகழ்ந்திட வைத்திட வா.
பாடல் 11
கந்தனே கலைமகனே, காத்திடுவாய் எனை நீயே வந்து நான் வழிபட்டால் அருள்மழை நீ பொழிவாய் ஈசனின் திருமகனே, அரவணைப்பாய் எனை நீயே உன் மந்திரத்தை ஓதிவந்தால் அகத்துள்ளே நீ இருப்பாய் ஆறுபடை வேலவனே ஆட்கொள்வாய் எனை நீயே நித்தம் உனை தியானித்தால் காட்சி தன்னை நீ தருவாய்.
பாடல் 12
அமைதியான மனதினிலே இன்பம் அழகில் ஜொளிக்கும் முருகனை கண்டு துள்ளும் ஊன் கடந்து உடல் கடந்து உயிரினை உணரும் மனமே அருட்சோதி தன்னை கண்டு மகிழும்.
பாடல் 13
தரிசனம் காண ஆசை உதிக்க மலையினை நாடி கால்கள் நடக்க பயணம் நெடுக களைப்பும் மறந்து உருவத்தை நினைத்து மந்திரம் ஜெபித்து கருவறை நுழைந்து கந்தனை கண்டு பரவசம் அடைந்தேன் நான் பரவசம் அடைந்தேன்.
பாடல் 14
பாவங்கள் செய்து அகத்தை கறுத்து ஆசையை வளர்த்து உடம்பினை அழித்து எண்ணங்கள் தாழ்ந்து மனதினை கெடுத்து குப்பையாய் என்தன் வாழ்கை இருக்கு நாடி வந்தேன் முருகா உனை தான் இன்று நல் உரமாய் என்தன் வாழ்வினை மாற்று குருவாய் நீயும் எனையே வழி நடத்து எண்ணமே உயர்த்தி அகத்தில் ஒளி ஏற்று.
பாடல் 15
ஆறுபடை வீடு இருக்கு, ஆதங்கம் உனக்கு எதற்கு ஆறுமுகம் எங்கும் இருக்கு, ஆறுதல் சொல்ல உனக்கு பன்னிரண்டு கைகள் இருக்கு உனை பக்குவமாய் வழி நடத்திக்கிட்டு பதினெட்டு கண்கள் இருக்கு உனை பத்திரமாய் பார்த்துக்கிட்டு ஞான ஒளி வேல் இருக்கு உனை காக்க என்றும் துணையிருக்கு அகத்துள்ளே முருகன் இருக்கு அதை விட்டு விட்டு வெளியே தேடிகிட்டு.
பாடல் 16
அழகான மலர்களும் தேன் சிந்தும் மாலையும் அலங்கரிக்கும் உன் தோள்களைத்தான் வெண்ணிற விபூதியும் மணம் வீசும் சந்தனமும் அலங்கரிக்கும் உன் மேனியைத்தான் ருத்ராட்ச்ச மாலையும் நவரத்தின மணிகளும் அலங்கரிக்கும் உன் மார்பினைத்தான் சிலம்பும் சதங்கையும் மணித்தண்டைகளும் அலங்கரிக்கும் உன் கால்களைத்தான் கந்தர் புராணமும் கலிவெண்பா திருப்புகழும் அலங்கரிக்கும் உன் தமிழினைத்தான் முருகனின் அருளும் ஞானத்தின் ஒளியும் அலங்கரிக்கும் உன் அடியேனைத்தான்.
பாடல் 17
நான்மறை வேதங்கள் நான் கற்றுணர்ந்து உனை தொழவில்லை தொழவில்லை உன் அடியார்க்கு சேவை ஆற்றிக்கொண்டு உனை போற்றவில்லை போற்றவில்லை உனக்காக விரதமிருந்து உடலை வருத்திக்கொண்டு பூஜை செய்யவில்லை செய்யவில்லை இளமை முழுதும் இன்பம் தேடி உனை நாடவில்லை நாடவில்லை ஆசை துறந்து மனதில் வைத்து உனை நினைக்கவில்லை நினைக்கவில்லை ஆனாலும் எந்தன் தாய் தந்தை நீயே என்னிடம் அன்பு காட்ட வேண்டும் அருள வேண்டும்.
பாடல் 18
மும்மலம் அழிக்க வா, சூரனை வதம் செய்த வேலவா அறியாமை அகற்ற வா, ஈசனுக்கு உபதேசம் செய்த வேலவா துயரம் நீக்க வா, தேவரின் அல்லல் அறுத்த வேலவா என் தேடல் நிறுத்த வா, வள்ளியை ஆட்கொண்ட வேலவா.
பாடல் 19
நாளென்றும் பொழுதென்றும் கருதாமல் தொழுதென்றும் உணவென்றும் உறக்கமென்றும் பாராமல் நினைத்தென்றும் மனம் அடங்கி சொல் அடங்கி சிதறாமல் கருத்திலென்றும் தவம் செய்யும் பக்தனுக்கு மனமிறங்கி வந்தருள வேண்டும் முருகா மனமிறங்கி வந்தருள வேண்டும்.
எத்தனை நாமங்கள் உன்னை அழைக்க எத்தனை உருவங்கள் உன்னை துதிக்க எத்தனை மதங்கள் இறைவனை அடைய எத்தனை பேதங்கள் மண்ணில் இருக்க
எல்லா உயிர்களும் சமமே என்று இறைவன் என்பது புறத்தில் இல்லை அகமே என்று அன்பே இவ்வுலகை ஆளும் சக்தி என்று பொருள் என்பது தேவை மட்டும் வாழ்க்கை அன்று உணர வைத்தாய் முருகா.
பாடல் 22
சிற்றின்பம் தேடி மடிந்து விடாமல் பேரின்பம் தந்து ஆட்கொள்வாய் குருவை தேடி சிக்கி தவிக்காமல் ஞானம் தந்து தெளியவைப்பாய் பொருளை தேடி தினம் கழியாமல் அருளை தந்து அரவணைப்பாய் பாவங்கள் செய்து வினைகள் தொடராமல் பிறப்பை அறுத்து முக்தி தருவாய்.
பாடல் 23
கந்தனை கருத்தில் கொண்டு கடமையை செய்வோம் அன்பையே விதைத்து கொண்டு இறைவனை நாடுவோம் ஒழுக்கத்தை கடைப்பிடித்து பணிவுடன் வாழ்வோம் அறத்தை செய்து கொண்டு உயிர்களை நேசிப்போம் எண்ணத்தை தவிர்த்து கொண்டு அமைதியாய் இருப்போம் உள்ளத்தில் குடியிருக்கும் இறைவனை உணர்வோம்.
பாடல் 24
வடபழனி ஆண்டவனே வந்த வினை தீர்ப்பவனே எனை ஆளும் மன்னவனே உனைக்காண ஓடி வந்தேன் முருகைய்யா வேல் முருகைய்யா கடற்கரையில் வீற்றிருந்தாய் கருணை உள்ளம் கொண்டவனே அலை அலையாய் வரும் பக்தர்க்கெல்லாம் காட்சி தந்து அருள்செய்தாய் முருகைய்யா வேல் முருகைய்யா குன்றுதோறும் ஆட்சி செய்தாய் உள்ளத்திலே குடியிருந்தாய் குமரனை நாடி வந்தால் மனக்குறைகளை தீர்த்துவைப்பாய் முருகைய்யா வேல் முருகைய்யா.
பாடல் 25
உலகின் இயக்கம் உன்னிடம் என் உடலின் இயக்கமும் உன்னிடம் ஆசை வந்து துளிர்விடும் மனதும் காண உருகிவிடும் குருவை தேடி சோர்ந்துவிடும் வேதம் கற்று குழம்பிவிடும் கண்ணை மூட வந்துவிடும் எண்ணம் கடத்தி சென்றுவிடும் உன்னை காண்பது எவ்விடம் என்று எனக்கு புலப்படும் முருகா என்று எனக்கு புலப்படும்.
பாடல் 26
ஆறுமுகச்சாமி என் ஆணவத்த வீழ்த்தி கடைக்கண் பார்த்து என் கன்மத்தை நீக்கி வேலாயுதம் விட்டு என் மாயையை விலக்கி உன் விஸ்வரூபம் காட்டி உன் பக்தனாய் மாற்றி.
பாடல் 27
அருணகிரி நாதர்க்கு காட்சி தந்த முருகா அகத்திய முனிவர்க்கு தமிழை தந்த முருகா ஔவைக்கு கனி தந்து அருள் செய்த முருகா வள்ளியை தேடி வந்து மணந்து கொண்ட முருகா உன் அடியார்க்குள் எனையும் சேர்த்துவிடு முருகா.
பாடல் 28
மீண்டும் மீண்டும் தவறு இழைத்து ஒழுக்கம் இழந்து செயலும் தாழ்ந்து பாவம் செய்து தினமும் கழிந்து உனக்கு முன்னே கூனிக்குருகி வாழ்க்கை உய்ய அழுது புலம்பி வேண்டுகின்றேன் முருகா அருள் செய்.
பாடல் 29
கந்தனை நினை கலியுகத்துணை செந்திலின் அலை சேர்த்திடும் கரை முருகனை சுமை நீங்கிவிடும் குறை சண்முகன் கணை அழித்திடும் வினை குகனை அழை வை உள்ளத்தில் சிறை.
பாடல் 30
என் காலை உன்னோடு தான் விடியும் என் பயணம் உன்னோடு தான் தொடரும் என் எண்ணம் உனை சுற்றியே திரியும் என் ஜீவன் உன்னோடுத்தான் கலந்து முடியும்.
பாமாலை தொடுத்து பாதத்தில் வைத்து விழிநீரை சுமந்து மனமுருகி கொண்டு உன் வரவை தான் பார்த்து ஏங்கித்தான் தவித்து இந்த ஜீவன் நிற்கின்றது முருகா.
பிகிலு பிகிலு பிகிலு பிகிலு பிகிலு பிகிலு இவன் கிட்ட வெச்சுக்காத கிழிஞ்சு போகும் செவுலு அல்லு அல்லு அல்லு அல்லு அல்லு அல்லு இவன் எதிரிக்கெல்லாம் கொடுக்க போறான் அல்லு விலகு விலகு விலகு விலகு விலகு விலகு இவன் (உள்ளத்தில்) ஆட்சி செய்ய வாறான் நீயும் வழிய விட்டு விலகு
ஆட்டத்துல இறங்கிபுட்டான் டா அத பார்க்க போது இந்த கூட்டந்தான் தமிழ்நாட்டு மண்ணுகாரன் டா இங்கே வேகாது ஏவன் ப(ரு)ப்பும் தான் எத்தன பேரு தடுத்தாலும் டா அத ஒடச்சிக்கிட்டு வர போறான் தான்
அவன் எண்ணத்தில தெளிவிருக்கு, உடம்புக்குள்ள வலுவிருக்கு மனசக்குள்ள தெம்பிருக்கு வெற்றியத்தான் அல்ல போறான் டா அவன் வெற்றியத்தான் அல்ல போறான் டா
ஏ பிகிலு பிகிலு பிகிலு பிகிலு பிகிலு பிகிலு ஏ அல்லு அல்லு அல்லு அல்லு அல்லு அல்லு
இங்கு கூடியிருக்கும் உறவு தானடா அவன் அன்பால வந்த கூட்டந்தான் சுத்தி சுத்தி பந்தாட வாறான் டா முட்டி முட்டி தடைகள தகர்க்க போறான் தான் எதிரி சூழ்ச்சி எல்லாம் வீணாகும் டா அத முறியடிச்ச ஆள போறான் தான்
பார்வை எல்லாம் சுத்திக்கிட்டு கால்கள் எல்லாம் ஓடிக்கிட்டு கூட்டத்தையும் முன்னேற்றி இலக்க அடிக்க போறான் டா தன் கூட்டத்தையும் முன்னேற்றி இலக்க அடிக்க போறான் டா
உருவம் கடந்து அருவம் அடைந்திடு புறத்தை விட்டு நீயும் அகத்தில் நுழைந்திடு மௌனத்தில் அமர்ந்து எண்ணம் கலைந்திடு சிவனை உணர்ந்து நீயும் இன்பம் கண்டிடு சிவனை உணர்ந்து நீயும் இன்பம் கண்டிடு
போராடு மனிதா தினமும் போராடு மனிதா உன் பாதை எல்லாம் பூக்கள் மலரும் ஒரு நாள் சோதனை வந்தால் அது வேதனை தந்தால் இதுவும் கடந்து போகும் என்று சொல்லிக்கொள்ளடா தோல்விகளும் நிறந்தரமில்லை வெற்றிகளும் நிறந்தரமில்லை வாழ்க்கையே நிறந்தரமில்லை பின்னே வாழும்போது கவலை ஏன்னடா
வசந்தமும் தேடிவரும் புதுவாழ்க்கை உன்னை தேடிவரும் நம்பிக்கை உன்னில் இருந்தால் தன்னம்பிக்கை உன்னில் இருந்தால் விதியை நொந்து வாழ்பவன் வாழ்க்கை விழும் அதனாலே மதியை கொண்டு உழைப்பவன் வாழ்க்கை வெல்லும் தன்னாலே
போராடு மனிதா தினமும் போராடு மனிதா உன் பாதை எல்லாம் பூக்கள் மலரும் ஒரு நாள்
கனவும் ஒரு நாள் நிஜமாகும் தினமும் நினைத்து வந்தால் இலக்கு என்பது தொடும் தூரம் தினமும் முயிற்சி செய்தால் பணமும் புகழும் தேடி வரும் செய்யும் செயலில் விருப்பம் இருந்தால்